Monday, August 31, 2009

பிள்ளையார் பிடிக்கப்போய் தொடர்ச்சி................


கன நாளுக்கு பிறகு ரிசப்சனோ,சாமத்தியவீடோ கொண்டாட துவங்கிவிட்டார்கள்.சரி அந்தப்பக்கமாய் ஒருக்கால் நடந்து போவம் என்ற முடிவில் ஒரு பயணம்.கைத் தொலை பேசி சிணுங்கியது.கனடாவில் இருந்து எனது நண்பன்,மச்சான் லன்டன் என்ன சொல்லுது இது முதற் கேள்வி எனது பதில் அது ஒக்கேடா.மச்சான் சனம் எல்லாம் எப்பிடி இது அடுத்த கேள்வி, சனம் ஒகே மச்சான் நான் என்ன எம் மீ யோ சனம் எப்பிடி எண்டு சொல்ல இது அடுத்த பதில்.வேலையெல்லாம் எப்பிடி அடுத்த கேள்வி, வேலை ஒரு மாதிரி போகுது இது என்னோடை பதில்,என்ன ச்லோவை கதைக்கிறாய் இது அடுத்த கேள்வி இப்பத்தான் வேலையாலை வாறன் கொஞ்ஜம் களைப்பு அது தான் பதில் சிலோவய் இருக்கு இது நான்.அவனுக்கு எனது பதில் அலுப்பு தந்திருக்க வேணும் போல தனது கதையை மாற்றினான். டேய் கலியாணம் கட்டிப் போடாதை,கட்டினாலும் கனடாவிலை கட்டிப் போடாதை, அப்பிடி கட்டினாலும் பொம்பிளையை பெத்துப் போடாதை என்று சொன்னான்.

எனக்கு அவன் எதை சொல்ல வந்தான் என்று விளங்கவே இல்லை,கனடா எனக்கு தெரியாத தேசம் சும்மா நக்கலாக அவனுக்கு சொன்னேன் கள்ளிப்பால் கொடுத்து கொம்மா உன்னை சாக்காட்டி இருக்கலாம் சும்மா அறுக்காதே அவன் சொன்னான் கொம்மா உனக்கு நெல்லை தீத்தி இருக்கலாம் என்று.சரிடா திரும்பவும் விடிய வேலை இனி போய் சாப்பிட்டு படிக்க வேணும் நாளைக்கு உனக்கு அடிக்கிறன் என்று நான் சொல்ல அவன் விடுகிற மாதிரி தெரியவில்லை.


நீ ஒன்டும் கதைக்க வேண்டாம் நான் கதைக்கிறன் கேள் கேக்கிறியா இல்லையா? இதற்கு மேலும் கேட்காமல் இருக்க முடியவில்லை சரி கேக்கிறன் கதை என்று சொன்னேன்.முதல் தொடக்கமே எனக்கு கஸ்டமாய் இருந்தது அதற்கு காரணம் அவன் ஆரம்பித்த வசனம் எங்கடை எளிய சாதியள் இங்கே கன்டாவிலை
என்று ஆரம்பித்தான் எனக்கு ஒன்று மட்டும் தெளிவாய் சற்று லேட்டாய் விளங்கியது. பையன் தண்ணி அடித்துவிட்டுத்தான் ரெலி போன் அடிச்சிருக்கிறான் என்று.ஒரு நிமிசம் பொறடா என்று சொல்லிட்டு நானும் ஓடிப்போய் திறந்திருந்த ஒரு கடையில் ஒரு பீர் வாங்கிட்டு பல்லால் மூடியை திறந்து ஒரு முடறு குடித்துவிட்டு அவனின் கதையை கேட்க ஆயத்தமானேன்.அவன் திரும்பவும் எங்கடை எளிய சாதிகள் எண்டான். நான் அவனிடம் டேய் தண்ணி போட்டிட்டாய் எண்டதுக்காக கண்டபடி கதைக்காதே.ஒழுங்காய் கதை என்றேன்.திரும்பவும் சொன்னதையே சொன்னான்.சரி அப்பிடியே இருக்கட்டும் சொல்ல வந்ததை முதலில் சொல்லு என்றேன் அவன் சொன்னதை கேட்டு நான் வடிவேலு போல அப்பிடியே ஷாக் ஆயிட்டன்.

அவன் சொன்னது இது தான் இப்ப எல்லாம் சாமத்திய வீடு என்றால் கனடாவில் வயசுக்கு வந்த பெண் மணவறைக்கு வரும் நேராம் கெலிகப்டரை வாடகைக்கு பிடித்து பூ தூவிகினம்.இது எவ்வளவு கொடுமை தெரியுமோ சும்மா காசு இருக்கிறதை காட்ட இந்த நாயளுக்கு வேறை வழி திரியேல்லை போலை எண்டான்.நான் சொன்னேன் அது பிழைதான் . அவன் பதில் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.அவனின் பதிலுடன் நான் கண்ட மண்டப கதைகளுடன் அடுத்த வாரம் பதிவை தொடர்கிறேன்..................

Read more...

Saturday, August 1, 2009

பிள்ளையார் பிடிக்கப்போய்...தொடர்ச்சி........


நான் இரயிலிருந்து இறங்கியாயிட்டுது, ஒரு முறை கண்ணாடி வழியாக பார்தேன் நம்ம டீ வை ஓ நண்பர் கைத்தொலை பேசியில் சரியான பிசி,என்ன நாட்டு பிரச்சினையையோ இவர் கதைக்கப் போறார் அல்லது இப்ப தடுப்பு முகாம்களுக்குள்அடைபட்டு கிடக்கும் நம்ம மக்களை பற்றியோ இவர் கதைக்கப் போறார் என்று நான் எனக்குள் நினைத்து கொண்ட போது தான் எனது முதல் சந்திப்பில் அவர் சொன்ன ஒரு விசயம் ஞாபகம் வந்தது.அது என்னவென்றால் தன்னை அறிமுகம் செய்த பின்னர் நாங்கள் எல்லாம் எதுக்கு ஆர்ப்பாடம் போறம் தெரியுமா சும்மா நல்ல ஜாலியா இருக்கும் மாமா வருவாங்கள் ஆத்தல் எடுக்கலாம்.இப்பிடி சொன்னதை நினைத்து கொண்டே ஒரு மாதிரி வெளியே வந்தாயிட்டு.


மீண்டும் பதிவு போடும் ஆர்வம் .மனக்குரங்கு வேறு பக்கமாக நினைவை கிளறியது.அது தான் தான்.அடிக்கடி எழுத்துப்பிழை நான் விடுவதால் தவறாக இரண்டு முறை தான் என்று கீ
போட்டில் தட்டச்சு செய்து விட்டதாக நினக்க வேண்டாம்.இது ஒரு தான் சொல்லின் தார்ப்பரியம் தான்.சின்ன வயதில் மார்க் குறைவாக வாங்கினால் பதில் வினாத்தாள் கடினம் அது தான்... வகுப்பில் அடி வாங்கினால் அது அவனால் தான்....ஏனடா அந்த பெட்டைக்கு கடிதம் கொடுத்தனி? அவவும் பாத்ததால் தான் இப்படி சின்ன வயதில் பல தான்கள். வெளி நாட்டில் அதிகாரிகள் கேள்வி: ஏன் நாட்டை விட்டு வந்தனீர் ? ஆமியாலையும்,புலியாலையும்,ஏனைய இயக்கங்களலையும் தான் இப்படி ஒரு தான்.ஆனால் எனக்கு கொஞ்ச நாளாய் ஒரேயொரு தான் தான் மூளையையும்,காதையயும்,கண்ணையும் ஆக்கிரமித்து இருந்தது.ஒருபக்கமாக வலது பக்கத்தில் பார்த்ததும் கேட்டதும் படித்ததுமாக ஒரு தானும் மற்றைய பக்கமாக இடது பக்கத்தில் பார்ததும் கேட்டதும் படித்ததுமாக ஒரு தானுமாக முற்று முழுதான தான் ஆக்கிரமிப்புக்கு நான் உட்பட்டிருந்தேன்.

டக்கிளஸால் தான்,கருணாவால் தான்,ஆயுத சப்பிளை இல்லாததால் தான்,போராளிகள் பற்றாகுறையால் தான், இந்தியாவால் தான்,அமெரிக்காவால் தான்,சீனாவால் தான்,பாகிஸ்தானால் தான்,உலக நாடுகளால் தான்,பனிப்போர் காலம் முடிவடைந்தமையால் தான்,மக்கள் பங்களிப்பு போதாமையால் தான், நடைபெற்ற ஊடுருவல்களால் தான்,விமான எதிர்ப்பு ஏவுகணை இல்லாமையால் தான்,றோவால் தான், சி ஐ ஏ ஆல் தான்,தமிழ்செல்வன் உலக நாடுகளில் பார்த்தவற்றை சொல்லாமையால் தான்,பாலசிங்கம் சொன்னதை கேட்காமையால் தான்,பேச்சுவார்த்தைக்கு போனதால் தான்,பின்னர் வெரித்தாஸ் கஸ்பர் தமிழின உணர்வாளர்களால் தான் என்று நீண்ட இந்த தான் கடைசியாக சீமானின் வார்த்தையாக தமிழக தமிழர்கள் தான் என்ற தானோடு வலது பக்கமும்

சகோதர இயக்க படுகொலையால் தான்,ஏக பிரதிநிதிதுவ கோட்பாட்டால் தான்,ரஜீவ்காந்தி கொலையால் தான்,இந்தியாவை பகைத்து கொண்டதால் தான்,வெறும் சுத்த இராணுவ கண்ணோட்டத்தோடு ஒரு போராட்டத்தை நகர்த்தியதால் தான்,சமாந்தரமான ஒரு அரசியல் கட்டமைப்பை கொண்டிருக்காததால் தான்,புரட்சிகர சக்திகளோடு ஐக்கியம் கொள்ளாததால் தான்,சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து கொள்ளாமையால் தான்,இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாததால் தான்,மேற்குலக நாடுகளுக்கு சாதகமாக செயற்பட்டதல் தான்,சாதிய வேற்றுமைகளுக்கு எதிராக போராட்டத்தை சமாந்தரமாக முன்னெடுக்காமையால் தான்,கொரில்லா போர்முறை வடிவத்தை கைவிட்டு மரபு வழி யுத்த பாதையை தேர்ந்தெடுத்தமை தான்,வெளி நாடு வாழ் தமிழ் சமூகம் தான் இப்படி என்ற சில பல தானோடு இடதுபக்கமுமாக

தானால் ஆக்கிரமிக்கப்பட்ட நான் ஏனோ தானோ என்று தெருவோரம் எனது வீட்டுக்கான நடையை ஆரம்பித்தேன்,எனது வீட்டிற்கு செல்வதற்கு இரு பாதைகள் தமிழ்கடைகள்,தமிழ் உணவகம்,தமிழர் சிகையலங்கார நிலையம், நம்ம சரவுணபவன் அண்ணாச்சியின் உணவகம்,தமிழன் வீடு வாங்கி விற்கும் வியாபார நிலையம் என்று வரிசையாக இருக்கும். இதை விட இன்னொரு சுவராசியம் இஸ்ரேல் நாட்டுகாரனுக்கு சொந்தமான ஒரு மண்டபம்.வாடகை அதிகம் .எனக்கு சில நேரம் அந்த மண்டபத்தை கடக்கும் போது இஸ்ரேல்காரன் நம்மடை ஆக்களை நம்பி தான் அதை கட்டினானோ என்று ஒரு நினவு வரும்.வெள்ளி,சனி, ஞாயிறு கிழமைகளில் நம்மடை ஆட்களின்ரை பிறந்த நாளும், கலியாண் வீட்டு ரிசப்சனும்,பூப்புனித நீராட்டு விழாவும்,இசை மாலை என்றும்,கலை இரவு என்றும் ஒரே ஆர்ப்பாட்டமாய் இருக்கும்,ஆனால் கன நாட்களாக அங்கே ஒரே மயான அமைதி நம்மடை மக்கள் வன்னி மக்களின் துயரோடு மூழ்கிப்போய் அந்த மண்டபத்தில் பெட்டைக்கு தோய வாக்கவும் இல்லை,பிறந்த நாள் இன்று பிறந்த நாள் என்று பாடவும் இல்லை,அடுத்த பாடகர் என்ற அறிவுப்பு வரவும் இல்லை. சும்மா அப்பிடி போடு என்று குத்துப்பாட்டு போட்டு ஆரம்பித்து இறுதியாக அங்கிளுக்கும் அன்ரிக்குமாக ஒரு பாட்டு போடுங்கோ என்று ஒருவர் சத்தமிட அங்கிள் அன்ரியை கையில் பிடித்தபடி தொண்டையில் நனைந்த விஸ்கி குடுக்கும் உசுப்பில் சம்மந்தமேயில்லாமல் யாருக்காக இது யாருக்காக என்று மைக்கை பிடிக்க அன்ரி சரோஜாதேவி ரேஞ்சுக்கு வெக்கப்பட்டு பக்கத்தில் இருப்போரிடம் இவர் அந்தக்காலத்தில் நல்லய்ப் பாடுவார் என்ற புழுகும் அடங்கி நிசப்தமாய் இருந்தது, நான் நடந்த அன்று தூரத்திலையே காதுவாக்கில் ஒரு பாட்டு சத்தம்..டாடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாருமில்லை................அது அதே இடம் .....தான்.......... நடையை சற்று விரிவுபடுத்தினேன்................

தொடரும்...........

Read more...

  © Blogger templates vimbam by vimbam.blogspot.com 2008

Back to TOP