Wednesday, December 31, 2008

இலங்கை அரசின் அந்தக்கால பயங்கரவாதப் ப‌ட்டியல்......



இலங்கை அரசாங்கம் தமிழ்மக்கள் மீதான தனது இன அழிப்பு போரை ஆரம்பித்த ஆரம்ப காலங்களில் அப்போதைய தமிழ் தலைவர்களின் பாராளுமன்ற அரசியல் பாதையில் நம்பிக்கை இழந்த தமிழ் இளையவர்கள் ஆயுத போராட்டத்தின் மூலம் தான் தமிழ் மக்களை பாதுகாக்க முடியும் என்ற முடிவிற்கு வந்தார்கள்.தனது இராணுவ சக்தியையும் இராணுவ வளத்தையும் மிலேச்சத்தனமாக ஏவிவிட்டு தமிழ் மக்கள் மீதான தனது போரினை அரசாங்கம் நடத்தும் போது தமிழ் மக்களின் ஆயுத பலம் தான் மக்களை பாதுகாக்கும் என்ற வரலாற்றின் நியதிக்கு தள்ளப்பட்டார்கள்.பல இயக்கங்கள் தோற்றம் பெற்றன என்றாலும் மக்களால் அறியப்பட்ட பிரதான‌ இயக்கங்களாக ஐந்து இயக்கங்கள் இருந்தன.விடுதலைக்காக புறப்பட்ட இயக்கங்கள் எல்லாவற்றையும் பயங்கரவாத இயக்கமாகவே இலங்கை அரசு அறிவித்தது.விடுதலை இயக்கங்கள் இடையே ஏற்பட்ட பகைமை உணர்வு ஒரு துன்பியல் வரலாறாகியது.அதன் விளைவு இந்திய இராணுவ காலத்தில் இந்தியாவிற்கு சாதகமாகவும்,இன்று இலங்கை அரசுக்கு சாதகமாகவும் மாறியுள்ளது கண்கூடானது.இன்று பயங்கரவாதிகள் என்று தனது சுட்டுவிரலை புலிகளை மட்டும் நோக்கி நீட்டும் இலங்கை அரசு தன்னுடன் சேர்ந்திருக்கும் பயங்கரவாதிகளையும் தனது இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவோரையும் சனநாயக சக்திகளாக பிரசாரம் செய்கிறது.இது இன்றைய நிலை இப்படியான நிலையில் அன்று ஒரு காலத்தில் இலங்கை அரசால் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்ட இயக்கங்கள்,அமைப்புக்கள்,குழுக்கள் ஆகியவற்றின் பெயர்களை இந்த வருட இறுதியில் பதிவு செய்கிறேன்.ஏதாவது பெயர்கள் தவறவிடப்பட்டிருந்தால் பின்னுட்டத்தில் அறிய தரவும்.பிரித்தாளுவது என்பது ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒரு கைவந்த கலை,முரண்பாடுகள் இயல்பானவை தவிர்க்கமுடியாதவை ஆனால் உண்மை என்பதற்கு முன்னால் முரண்பாடு என்ற கருத்தாக்கம் தோற்று போகிறது,எமது ஒற்றுமையின் பலத்தின் மூலம் எமது சுய நிர்ணய உரிமையை வென்றெடுப்போம் யாசர் அரபாத் இல்லாத பாலஸ்தீனம் இந்த வருட இறுதியில் எமக்கு இன்னொரு செய்தியையும் சொல்லி நிற்கிறது........



தமிழீழ விடுதலை புலிகள் (LTTE)


த‌மிழீழ‌ விடுத‌லை இய‌க்க‌ம்(TELO)


த‌மிழீழ‌ ம‌க்க‌ள் விடுத‌லை க‌ழ‌க‌ம்(PLOTE)


ஈழ‌ ம‌க்க‌ள் புர‌ட்சிக‌ர‌ விடுத‌லை முண்ண‌ணி(EPRLF)


ஈழ‌ புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர் அமைப்பு(EROS)


த‌மிழீழ‌ விடுத‌லை இராணுவ‌ம்(TELA)


த‌மிழீழ‌ இராணுவ‌ம்(TEA)


த‌மிழீழ‌ விடுத‌லை தீவிர‌வாதிக‌ள்(TELE)


த‌மிழ‌ர் பாதுகாப்பு பேர‌வை

தீப்பொறி


செம்ப‌டை(RA)


புர‌ட்சிக‌ர‌ த‌மிழீழ‌ ம‌க்க‌ள் விடுத‌லை இராணுவ‌ம்(TERPLA)


தமிழீழ புரட்சி அமைப்பு(TERO)


தமிழீழ விடுதலை கெரில்லாக்கள்(TELG)


தமிழீழ தேசிய விடுதலை முன்னணி(NLFT)


த‌மிழீழ‌ பாதுகாப்பு ப‌டை(TEDF)


இல‌ங்கை விடுத‌லை த‌மிழ் இராணுவ‌ம்(IFTA)


த‌மிழீழ‌ தேசிய‌ இராணுவ‌ம்(TENA)


த‌மிழ் ம‌க்க‌ள் பாதுகாப்பு அமைப்பு(TPSO)


த‌மிழீழ‌ கொமாண்டோக்க‌ள்(TEC)


த‌மிழீழ‌ க‌ழுகு முன்ன‌ணி(TEEF)


க‌ழுகு ப‌டை(EM)


த‌மிழீழ‌ கொரில்லா இராணுவ‌ம்(GATE)


ச‌மூக‌ புர‌ட்சி ச‌மூக‌ விடுத‌லை(SRSL)


மூன்று ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள்(THREE STARS)


ஈழ‌ தேசிய‌ ஜ‌ன‌நாய‌க‌ விடுத‌லை முன்ன‌ணி(ENDLF)


த‌மிழீழ‌ விடுத‌லை கோப்ராக்க‌ள்


த‌மிழீழ‌ புர‌ட்சிக‌ர‌ விடுத‌லை இய‌க்க‌ம்.(RELO).


Read more...

Monday, November 24, 2008

ஸ்ராலின் கிராட் சமர்..............


சுருக்கமாக சொல்வதானால் இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜேர்மனிய படைகளுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் இன்று வோல்கோ கிராட் என்று அழைக்கப்படும் ஸ்ராலின் கிராட்டில் நடைபெற்ற யுத்தம்.உலக வரலாற்றில் பல யுத்தங்கள் நடைபெற்ற போதிலும் இன்றுவரை பேசப்படுகிற அல்லது விமர்சிக்கப்படுகிற யுத்தங்கள் மிக குறைவானவை ஆனால் இன்று வரை ஸ்ராலின் கிராட் யுத்தம் பற்றி பேசப்படுகிறது அல்லது எழுதப்படுகிறது,தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படுகிறது,சவுத் ஏசியா அனலைஸ் குரூப் ஆய்வாளர் தற்போது இலங்கை நிலவரம் பற்றிய ஆய்வில் இந்த யுத்தத்தை மேற்கோள் காட்டிவிட எம்மவர் மத்தியில் ஸ்ராலின் கிராட் பற்றி அதிகம் பேசப்படுகிறது அதனால் விம்பமும் ஸ்ராலின் கிராட் யுத்தத்தினை நினைவு கொள்கிறது.


இரண்டாம் உலக யுத்தத்தின் ஐரோப்பிய அரங்கின் திருப்பு முனையாக கருதப்படும் இந்த சமர் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் நீடித்தது,நீண்ட காலம் நடைபெற்ற ஒரு மரபு வழி சமராக இராணுவ ஆய்வாவாளர்களால் வர்ணிக்கப்படுகிறது.17 ஜூலை 1942 இற்கும் பெப்ரவரி2 1943 இற்கும் இடையில் நடைபெற்ற இந்த சமரில் மொத்தமாக 1.5 மில்லியன் பேர் பலியானார்கள்.இரண்டு நாள் இரண்டு வாரம்,இரண்டு மாதம் என ஹிட்லரால் எண்ணப்பட்ட நாட்களின் கனவு தவிடுபொடியானது.22 ஆம் திகதி ஜூன் மாதம் 1941 ஆம் ஆண்டி ஹிட்லரின் நாசி படை சோவியத் மீது பார்பரோசா என்ற பெயரில் படை நடவடிக்கையினை ஆரம்பித்தது.ஜேர்மன் படைகளும் அதன் கூட்டுப் படைகளும் விரைவாக சோவியத் பகுதிக்குள் ஆழ கால்பதித்தார்கள்.ஸ்ராலின் கிராட் மீது ஹிட்லர் படை எடுப்பதற்கு பிரதானமான இரண்டு காரணங்கள் இருந்தன.அவற்றுள் ஒன்று வால்கா நதிக்கரையில் அமைந்திருந்த இந்த நகரம் கஸ்பியன் கடலையும் வடக்கு ரஸ்ஸியாவையும் இணைக்கும் பிரதான போக்குவரத்து பாதையாக இருந்தது.மற்றய காரணம் எண்ணை வள பகுதியான க்கஸஸ் பகுதியை நோக்கி முன்னேறிய படைகளுக்கு பாதுகப்பாக இருக்கும் என்பதும் ஆகும்.இதனை விட உளவியல் ரீதியாக ஸ்ராலின் பெயரில் நகரம் இருந்ததும் ஸ்ராலின் கிராட் நகரை கைப்பற்ற ஹிட்லறை தூண்டியது.

ஜேர்மனிய 6 வது இராணுவத்துக்கு தலைமை தாங்கிய ஜெனரல் போலசின் பணி காகஸஸ் பகுதியில் உள்ள எண்ணை வழங்களை கைப்பற்றுவதாக இருந்தபோதிலும்,அதற்காக ஸ்ராலின் கிராட்டை கைப்பற்றுமாறு ஹிட்லரால் உத்தரவிடப்பட்டது.செய் அல்லது செத்து மடி என்பது போல தாக்குதலை மேற்கொள்ளுமாறு ஸ்ராலினால் உத்தரவிடப்பட்டது,தமது தலைவனின் பெயராலான நகரை காப்பதற்குபொது மக்களும் ஆயுதம் ஏந்தினார்கள்.இருவருக்கு ஒரு துவக்கு என்ற வகையில் ஆயுதம் வழங்கப்பட்டது.ஒரு அடி கூட பின்னகர வேண்டாம் என உத்தரவு பிறந்தது.பல இடங்களை ஜேர்மனியர்கள் கைப்பற்றியபோதும் அவற்றை நிலையாக தக்க வைக்க முடியவில்லை.பகலில் ஜேர்மனியர்கள் கைப்பற்றிய பகுதிகளை இரவில் ரஸ்ஸியர்கள் மீளவும் மீட்கப்பட்டது.அகல கால் பதித்த ஜேர்மனியர்கள் மீதான முறியடிப்பு சமரினை மேற்கொள்ள நவம்பர் 19 அளவில் ரஸ்ஸியா முழுமையான தயார் நிலையினை அடைந்தது.ஒரு மில்லியன் படைபலம் கொண்ட 6 படைப்பிரிவுகள் மார்ஷல் சுகோவ் தலைமையில் நகரை சுற்றிவளைக்க தயாராகினர்.வடக்கு பகுதியில் இருந்து ரமானன்கோ தலைமையிலான 5 ஆவது தாங்கி படையணி தாக்குதலை ஆரம்பிக்க 21,65,24.64,57,52 ஆவது படையணிகள் தெற்கு பகுதியில் இருந்து தாக்குத‌லை ஆர‌ம்பித்த‌ன‌.இரு முனை தாக்குத‌ல் அணிக‌ளும் ந‌வ‌ம்ப‌ர் 23 ஆம் திக‌தி காலாச் ப‌குதியில் இனைந்து கொண்டன.250 000 முதல்300 000 வரையிலான ஜேர்மன் படையினர் சுற்றி வளைக்கப்பட்டு பொறிக்குள்அகப்பட்டு கொண்டார்கள்.எவரும் சரணடைய கூடாது என்றும் இறுதி தோட்டா உள்ளவரை யுத்தம் செய்ய வேண்டும் எனவும் கட்டளை இட்ட ஹிட்லர் போலஸை ஊக்குவிப்பதற்காக பதவி உயர்வையும் வழங்கினார்.எவையும் வேலைக்கு ஆகவில்லை,கால நிலை மோசமானது,வெப்பநிலை பூச்சியத்துக்கு கீழ் சென்றது.ஆயுதங்களுக்கும்,உணவுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது,எதுவுமே செய்ய முடியாத நிலையில் ஜனவரி1943 இல் தென் பகுதி ப‌டையின‌ர் ச‌ர‌ண‌டைய‌ வ‌ட‌ ப‌குதி ப‌டைய‌ணி 2 ஆம் திக‌தி பிப்ருவ‌ரி ச‌ர‌ண் அடைந்த‌து.பெரும்பாலான‌ ப‌டையின‌ர் இற‌க்க‌ 91000 இற்கும் அதிக‌மானோர் சிறைப்பிடிக‌ப்ப‌ட்டார்க‌ள்.ஸ்ராலின் கிராட்டின் தோல்வியும்,படையணிகளின் இழப்பும் ஜேர்மனியால் ஈடு செய்ய முடியாது போனதை ஜேர்மனி மீது ரஸ்ஸியா படை எடுத்த தருணங்கள் உணர்தி நிற்கிறது.



ஹிட்லரின் தளபதிகள் ; போலுஸ்,மன்சுடெயின்,ரிச்தோபுன்,கொசுடாவ் ,கரிபால்டி,துமிதிரிஸ்கு,கொண்ஸ்டான்டினெஸ்.

ஸ்ராலினின் தளபதிகள் ;

ஸ்யிகொவ், யெமெரென்கோ,வஸ்யேவ்சுகி,கிரகொரி ,செம்யோன்,மலினொவ்சுகி .

படை பலம்


ஜேர்மன்;ஆட்பலம் 1 011 500 ஆட்லறி10,290 தாங்கிகள் 675 விமானங்கள் ;1,216.

ரஸ்ஸியா; ஆட்பலம் 1,000,500 ஆட்லறி 13,541 தாங்கிகள் 894 விமானங்கள் 1,115.


Read more...

Tuesday, November 11, 2008

11-11-1918 -காலை பதினொரு மணி .......



1918 ஆம் ஆண்டு பதினோராம் மாதம் பதினோராம் திகதி காலை பதினொரு மணி உலகத்தை உலுக்கிய முதலாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்த நாள்.தொண்ணூறு ஆண்டுகள் கடந்துவிட்டாலும் உலகில் இன்னமும் யுத்தம் முடிவுக்கு வரவில்லை.முதன் முதலாக போரில் விசவாயு பயன்படுத்தப்பட்ட யுத்தம்.ஜேர்மனியின் பேர்லின் நகருக்குள் நேச நாடுகளின் படைகள் நுழைந்ததுடன் முடிவுக்கு வந்தது.ஒன்பது மில்லியன் படையினர் இறக்க இருபதியொரு மில்லியன் படையினர் காயம் அடைய ஆக குறைந்தது ஐந்து மில்லியன் பொதுமக்களும் பலி கொள்ளப்பட்டனர்.ஜேர்மனி,ரஷ்யா,ஆஸ்ரியா ‍ஹங்கேரி,பிரான்ஸ்,இங்கிலாந்து ஆகியா நாடுகளை சேர்ந்தோர் சராசரியாக ஒவ்வொரு மில்லியன் மக்கள் பலியானார்கள்.


ஜூன் மாதம் இருபத்தியெட்டாம் திகதி 1914 ஆம் வருடம் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவமே இந்த உலக யுத்தத்திற்கு காரணமாக அமைந்தது.சேர்பிய நாட்டவரால் ஆஸ்திரிய இளவரசரும் அவர் மனைவியும் சுட்டுக் கொல்லப்பட சேர்பியா மீதான போர் பிரகடனத்தை ஆஸ்திரியா ஜூலை இருபத்திஎட்டாம் திகதி வெளியிட்டது.இருபத்தி ஒன்பதாம் திகதி சேர்பிய தலைநகர் மீதான தாக்குதலை ஆஸ்திரிய படை ஆரம்பித்தது.சேர்பியாவுக்கு ஆதரவாக பிரித்தானியா,பிரான்ஸ்,ரஷ்யா,இத்தாலி ஆகியநாடுகளும்,ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக ஜேர்மனி,ஹங்கேரி,பல்கேரியா,துருக்கி ஆகிய நாடுகளும் களம் இறங்க 1914 ஆகஸ்ட் மாதம் முதலாம் உலகப் போர் வெடித்தது.1561 நாட்கள் நீடித்த யுத்தம் 11/11/1918 பகல் 11 மணிக்கு முடிவுக்கு வந்தது.இந்த யுத்தகாலத்தில் தான் ரஷ்யாவில் முதலாவது கம்யூனிச சாம்ரச்சியம் உதயமாகியது.பல புதிய நாடுகள் பிறப்பெடுத்தன.90 வருடங்கள் கடந்தாலும் உலகில் இன்னும் யுத்தம் ஓயவில்லை

Read more...

Saturday, October 25, 2008

ஈழ தமிழனின் அவலக்குரல்......... கேட்கிறதா சொந்தங்களே ??????

Read more...

Friday, October 17, 2008

யூரோ கணவாயில் பதிந்த சேயின் இறுதி கால் தடங்கள்.......


அக்டோபர் 09

யூரோ கணவாய் அக்டோபர் மாதம் 8 ஆம் திகதி உலகின் ஒப்பற்ற போராளியின் கால் தடம் இறுதியாக பதிந்த இடம்.பொலிவிய இராணுவம் கும்மாளம் இட்டது.பிடிபட்ட மனிதனை பனாமா கொண்டு செல்ல சி ஐ ஏ விரும்பிய போதும் சுட்டுக்கொலை செய்யும்படி பொலிவியாவின் தலைவனால் இராணுவ தளபதிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.தமது தலைவனின் கால் தடத்தை கண்டு கொண்ட போரளிகள் குழு எப்படியும் தமது தலைவரை அந்தித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் கால் தடத்தை பின்பற்றி கிராம் பள்ளி அருகெ சென்று மறைந்து நிலை எடுத்து விடியும் வரை தாக்குதலுக்காக காத்திருக்கிறது.அவர்கள் மறந்திருந்த புதருக்கு அருகில் இருந்த அறையில் தான் அவர்களின் தலைவன் சிறைவக்கப்பட்டுள்ளார் என்பதை அந்தப் போராளிகள் அறிந்திருக்கவில்லை.காலை பறந்த உலங்குவானூர்தியில் தமது தலைவரின் உடல் தான் கொண்டு செல்லப்படுகிறது என்பதையும் அறிந்திருக்கவில்லை.

கணவாயில் பிடிபடும்போதே தன்னை கொல்லாதவர்கள் தன்னிடம் விசாரணை நடத்தி கடும் தண்டனை தருவார்கள் என்று நம்பிய போராளியை கோழத்தனமாகவும் நயவஞ்சகமாகவும் மதுபோதையின் தடுமாற்றத்தோடு லூயி டெக்ரரான் என்ற இராணுவத்தினன் சுட்டு கொன்றான்.சுட்டதோடு மட்டும் அவர்களின் கொலைவெறி அடங்கவில்லை.உன்னதமான அந்த போராளியின் இரண்டு கைகளும் வெட்டி அகற்றப்பட்டன.தோல்விகண்டது நான்மட்டும் தான் ஆனால் புரட்சியல்ல இறுதிவரை புரட்சிப்போர் தொடரும் என தன்னை கைது செய்தோரிடம் இறுதியாக சொன்ன வார்த்தைகள்.ஆயுத போராட்டத்தின் மூலமே அனைத்து அடக்கு முறைகளையும் தகர்த்து எறியலாம் எனவும் அமெரிக்கவிற்கு எதிராக பல வியத்நாம்கள் உருவாக வேண்டும் எனவும்,சொல்லுவந்த சர்வதேச போராளி .அவர் தான் சேகுவேரா.

பத்துமாதத்திற்கு ஒரு மாதம் முன்பே இந்த உலகை பார்த்த குழந்தை,இறுதிவரை அஸ்துமாவுடன் போராடியவன்,மருத்துவன்,தொழு நோயாளிகளுக்கு தொண்டாற்றியவன்,மாணவனாக இருந்தபோதே பன்னிரெண்டு மாநிலங்களை சுற்றி வந்தவன்.கரும்பு தோட்ட பணியாளி,தொழில் சங்க தலைவராவதற்காக சுரங்க தொழிலாளியாக பணியாற்றியவர்,காஸ்ரோவின் பிரதான தளபதி,கியூப புரட்சியின் நட்சத்திரம்,குடியுரிமையையும்,அமைச்சர் பதவியையும் உதறிவுட்டு கங்கோலியாவில் புரட்சிக்காக புறப்பட்டவன் பதினாறு மாத காலம் பொலிவியாவில் போராட்டம் என சுருக்கமாக கூறினாலும் அந்தப்போரளியின் வரலாறு இதனையும் தாண்டியது.

எண்பத்தியிரண்டு போரளிகளை சுமந்துகொண்டு புறப்பட்ட கிராண்மா படகில் தான் சேயின் வரலாறும் வீர வரலாறு ஆகிறது.கேலாரடோஸ் கரையில் படகு தரை தட்டி போராளிகள் கரை சேர்ந்த்ததுமே சுற்றி வளைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளானார்கள்.அப்போது தான் சேயின் துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட சன்னம் பாட்டஸ்ட படை உறுப்பினர் ஒருவரை கொன்றது.இது தான் ஆரம்பம்.சே தலைமையிலான பதினெட்டு பேர் கொண்ட போராளிகள் குழுஆயுத பலம் பொருந்திய ஐம்பத்துமூன்று இராணுவத்தினரை மே மாத்ததில் எதிர்கொண்டு பாரிய வெற்றியை ஈட்டியது.இந்த தாக்குதல் போராட்டத்துக்கு ஆதரவாக நடுத்தர மற்றும் விவசாய மக்களை இணத்தது.போராளிகளில் மக்கள் நம்பிக்கை கொண்டார்கள்.ஜீலை 26 தாக்குதலுக்கு முன்னர்21 ஜீலை 1957 இல் சே தளபதியாக நியமிக்கப்பட்டார்.போராளிகளை காட்டி கொடுப்போருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது.{இது குறித்து ரால் காஸ்ரோவும் சேயும் விவாத்திததாக கூறப்படுகிறது 1959 ஆம் ஆண்டு லக்பானாவில் பலருக்கு மரண தண்டனை வழங்கும் படிவத்தில்கையொப்பம் இடும் போதும் சே குழப்பம் அடைந்த்தாகவும் கூறப்படுகிறது.].சான்டாகிளாரா போர் சேயின் சிறந்த போராற்றலையும் மன உறுதியயும் உலகுக்கு வெளிப்படுத்தியது.கியூப புரட்சியின் வெற்றியின்பின்னர் சே கியூப குடியுரிமையையும் பெற்றுக் கொண்டார்.தொழில் அமச்சராக பதவியேற்ற போது வங்கி தலைவர் பதவியையும் ஏற்று கொண்டார்.இலத்தீன் அமெரிக்க நாடுகளில் போராடவிரும்பிய போராளிகளுக்கு பயிற்சி அளித்த சே ஆர்ஜென்ரீனா போக விரும்பினாலும் காஸ்ராவின் தலையீட்டால் அம் முயற்சி தடுக்கப்பட்டது.கியூபா குடியுரிமைய துறந்த அவர் கொங்கோ நோக்கி தனது போராட்ட பாதையை தொடர்ந்தார்.கிராண்மா படகில் சேயிற்கு வழங்கிய வாக்குறுதியை காஸ்ரோவால் மீற முடியாமல் அனுமதி வழங்கப்பட்டது.கொங்கோவை நோக்கி சே பயணித்த பின்பு தான் கியூபாவின் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக நடந்தேறியது.இந்த கூட்டத்தில் தான் பல்லாயிர கண்க்கான மக்கள் முன் சேயினால் காஸ்ரோவிற்கு எழுதிய கடிதம் வாசிக்கப்பட்டது.

கொங்கோவில் கபிலாவின் தவறான போக்கினால் போராட்டத்தில் சரியாக ஈடுபடமுடியவில்லை.இதனை விட கங்கோலியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை விட கொள்ளயடிப்பதிலே முழுமூச்சாக இருந்தார்கள்.குண்டு சத்தம் கேட்டவுடன் ஆயுதங்களை போட்டுவிட்டு ஓட்டம் எடுத்தார்கள்.போராளிகள் மன சோர்வடைந்தார்கள்.தனது தாய் இறந்த சேதியை அறிந்தார்.கபிலாவை மீறி முடிவு செய்தவர். தானே போராட்ட களத்தில் குதித்தார்.ஜூலை கடைசியில் சே தலைமையில் தாக்குதல் நடத்தப்பட்டது.போராளிகள் தெம்படைந்தார்கள்.ஒலிம்பியாவை கைப்பற்றி பல இடங்களில் தொடர்ச்சியாக தாக்குதலை நடத்த முடிவு செய்தார்.ஆனால் சேயின் நிலையை கடிதங்கள் மூலம் அறிந்த காஸ்ரோ சேயை காப்பாற்ற முடெவெடுத்தார்.எதிரிகள் நெருங்கி கொண்டிருந்த்த நேரத்தில் குவேரா படகேறினார்.

கியூபா செல்வதற்கு விரும்பாத குவேரா ஆர்ஜென்டீனா சென்று அங்கு கொரில்லா போ.ராட்டத்தை ஆரம்பிக்கபோவதாக கூறினார்.தான்சானியா சென்றபின்னர் அது பற்றி சிந்திக்கலாம் என கூறிய காஸ்ரோவின் பிரதிநிதிகள் அவரை தான்சானிய தலை நகரில் அமைந்திருந்த கியூப தூதரகத்தின் மேல் அறையில் தங்க வைத்தார்கள்.மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட்டது.சேயின் மனைவியும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இறுதியாக தயார்படுத்தலுக்காக கியூபா திரும்ப ஒப்பு கொண்டார்.பல நாடுகள் பரீட்சிக்கப்பட்டு இறுதியாக பொலிவியா தேர்வானது.அப்போது பொலிவிய கம்னியூஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தவருடன் பேச்சுக்கள் நடைபெற்றன.ஆஜென்டீனா செல்லும் வழியில் ஒருவர் கடந்து செல்ல உதவ வேண்டும் எனவும் சிலர் பயிற்சி பெற உதவ வேண்டும் என்வும் கேட்கப்பட்டது.மறு புறத்தில் தமது பெயர்கள் மாற்றப்பட்டு போராளிகள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்கள்.மிகவும் இரகசியமானா முறையில் பயிற்சி வழங்கப்பட்டது.1966 பங்குனி மாதம் சான் ஆன்ரோ முகாம் கலைக்கப்பட்ட்டது.பொலிவியாவிற்கு கொரில்லா போர் பொருந்த்தாது என மீண்டும் மீஇண்டும் சேயிடம் வலியுறுத்தப்பட்டது.காலம் வரும் என்று காத்திருக்க முடியாது ஏதோ ஒரு இடத்தில் ஆரம்பிக்கவே வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.தனது போராளிகளை மூன்று குழுக்களாக பிரித்தார். மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் போராளிகளின் காமிலோ முகாம் அமைந்திருந்தது.ஆனால் முகாமிற்கு அருகில் வசித்த இருவரின் சந்தேக பார்வை போராளிகள் மீது விழுந்தது.இடத்தை மாற்றிவிட விரும்பிய சே புதிய இடம் தேடும் முயற்சியில் இறங்கினார்.போராளிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.முகாமில் இருந்த பல பொருட்கள் புதைக்கப்பட்டன. கியூப நாட்டவரான மாக்ஸ் உட்பட நான்கு பேர் முகாம் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.இருபத்திஐந்து நாள் பயணம் திட்டமிடப்பட்டது.ஒவ்வொருவரும் இருபதுகிலோ பாரத்தை சுமந்தபடி தண்ணீர் இல்லா புதர் காடுகளினூடாக பயணத்தை தொடர்ந்தனர்.தாகம் தாங்க முடியாத சிலர் சிறுநீரை அருந்தினர்.மற்றைய குழுனினர் உடனான தொடர்புகள் இல்லை.வழியில் குதிரை இறச்சியை உண்டதால் உடல் உபாதைக்கு ஆளானார்கள்.போராளிகளுக்கு இடையில் முரண்பாடுகளும் தர்க்கங்களும் ஏற்பட்டன.போராடுவதற்கு முன்னரே ஒரு போராளி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.உடல் நலக் குறைவால் சேயும் பலவீனமடைந்தார்.போராளிகள் மீண்டும் முகாம் திரும்ப முடிவு செய்தனர்.சேயை தேடி சென்ற சில போராளிகள் வழியில் சந்தித்த விவசாயியிடம் உணவு கேட்டனர்.விவசாயி உணவளித்தார்.ஆனால் தகவல் இராணுவத்துக்கு பறந்தது.இரண்டு பேர் சரணடைந்தனர்.முழு தகவலும் இராணுவத்துக்கு தெரியப்படுத்தப்பட்டது.அதே நாளில் சேயின் நம்பிக்கைக்கு பாத்திரமான பொலிவிய போராளி காலோஸ் படகு கவிழ்ந்து ஆற்றில் மூழ்கினார்.நாற்பத்தி ஒன்பதாம் நாள் மீண்டும் முகாம் பகுதிக்கு திரும்பினர்.பங்குனி இருபதாம் திகதி ரோந்து இராணுவ உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார்.முதல் போர் வெடித்தது.ஆயுதங்கள் பல கைப்பற்றப்பட்டன.இராணுவம் கொதிப்படைந்தது.மலை பகுதியை நோக்கி நகர சே திட்டம் வகுத்தார்.இரண்டு வெவ்வேறு தாக்குதல்களில் 7 இராணுவத்தினர் கொல்லப்பட 24 பேர் கைதாகினர்.5 பேர் காயம் அடைந்தனர்.சேயின் வீரம் செறிந்த தளபதிகள் இருவர் மரணித்தார்கள்.இப்படியான நேரத்தில் சில போராளிகள் நழுவினார்கள்.பொலிவியர் கியூபர் என்ற பிரச்சினை எழுந்தது.புதிதாக எவரும் இணையவில்லை.இரண்டு கிராமங்களுக்குள் சென்று விவசாயிகளிடம் ஆதரவு கேட்டார்கள்.பலனில்லை.ஆகஸ்ட் 7 ஆம் திகதி போராட கூடிய ஆறு பேரில் தான் ஆஸ்மாவுடன் போராடுவதாக சே எழுதினார்.தான் பயணம் செய்த குதிரையையே உணவாக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது.காட்டு வழியாக மீண்டும் ஆதார முகாம் நோக்கி புறப்பட்டனர்.போராளிகளுக்கு பணத்துக்காக பொருட்களை விநியோகம் செய்த ரோஜசின் உதவியுடன் சதிவலை பின்னப்பட்டது.அமெரிக்க குடியேற்ற கனவும் பணமும் ஆசை காட்டப்பட்டன.முகாமுக்கு அருகில் இருந்த இராணுவ நிலைகள் அகற்றப்பட்டன்.ஆற்றங்கரையில் ஓரிடத்தில் தான் சந்திப்பதாக கூறப்பட்டது.மறு நாள் போராளிகள் அவ்விடம் சென்று உணவை பெற்றார்கள்.தனது மகன் மூலம் ஏற்கனவே இராணுவத்திற்கும் தகவலை வழங்கி இருந்தான்.போராளிகள் திரும்பி செல்வதற்கான வழியும் அவனால் கூறப்பட்டது.அதே இடத்தில் இராணுவத்தினர் தயாராக நின்றிருந்தார்கள்.சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.பலர் கொல்லப்பட சிலர் கைதாகினர்.இது நடை பெற்றது ஆகஸ்ட் 30.செப்டம்பர்26 ஆம் திகதி சே தலைமையிலான குழுவினர் கிகியோரா கிராமத்தை அடைந்து அங்கிருந்து வெளியேறும் போது தாகுதலுக்கு உள்ளாகினர்.அக்டோபர் 3 இலிருந்து 7 ஆம் திகதிவரை கணவாய் வழியாக நகர்ந்தனர்.இராணுவ முற்றுகையை உடைத்து தப்பிக்க திட்டம் வகுக்கப்பட்டது.தப்பித்து பிடல்பார்க்கோ ஆற்றங்கரையில் ஒன்றாக சந்திக்க முடிவு செய்யப்பட்டது.ஒவ்வொரு கணவாயக நர்ந்து தப்பிக்க சே முயன்றார் .இராணுவம் நெருங்க்கிவிட்டது.மோதல் வெடித்ததுமூன்று போராளிகள் மருணித்தார்கள்.சேயின் காலிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.சேயின் துப்பாக்கியும் செயலிழந்தது.சேயும்,வில்லியும் நிராயுதபாணிகளாக கைதானார்கள்.கயிற்றால் இருவரையும் கட்டி அருகிலிருந்த பாடசாலைக்கு கொண்டு சென்றார்கள்.அங்கு தான் 39 ஆன்டுகள்45 நாட்கள் வாழ்ந்த மனித சரித்திரம் கோழை தனமாக கொலை செய்யப்பட்டது.

***தவிர்க முடியாத சில காரணங்களால் அக்டோபர் 9 ஆம் திகதி இப்பதிவை பதிவிட முடியாமைக்கு விம்பம் தனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது*****

Read more...

Saturday, September 27, 2008

தேசியத்தின் தேவை.................


ஸன் யாட் ஸென் ஆற்றிய 16 சொற்பொழிவுகளை கொண்ட சுதந்திரத்தின் தேவைகள் என்ற புத்தகத்தை அண்மையில் வாசிக்க நேர்ந்தது.தமிழாக்கத்தை வெ.சாமிநாத சர்மா சுந்திருந்தார்.தேசியத்தின் தேவை என்ற சொற்பொழிவை விம்பம் தனது நண்பர்களுக்காக பதிவு செய்கிறது.இயலுமானவரை சுருக்கியே இப் பதிவு பதிவிடப்படுகிறது.நண்பர்களின் கருத்துக்கள் உற்சாகம் தரும் .தேசிய உணர்ச்சி என்ற தலைப்பில் இந்த சொற்பொழிவு 10-02-1924 இல் நிகழ்த்தப்பட்டது



ஒரு ராஜ்யம் முன்னுக்கு வருவதற்கும் தனது வாழ்க்கையை ஸ்திரப்படுத்தி கொள்வதற்கும் தேசிய உண்ர்ச்சி அவசியமானதாகும்.அந்த உண்ர்ச்சி இருப்பது ஒரு பொக்கிசம் இருப்பது போலாகும்.இன்று சீனா அதனை இழந்துவிட்டது.ஏன்?
இந்த தேசிய உணர்ச்சியை நாம் ஒரு நாளில் இழக்கவில்லை.அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னரே இழந்துவிட்டோம்.1911 ஆம் வருட புரட்சிக்கு முன்னர் தேசியத்தை எதிர்த்து பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகள் எல்லாவற்றையும் பாருங்கள்.அந்த காலத்தில் தோன்றிய நூல்களில் எல்லாம் தேசிய உண்ர்ச்சி காணப்படவில்லை.அவை ம்ஞ்சு அரச புகளையே பாடி நின்றன.அந்த அரச பரம்பரைக்கு எதிராக ஒரு வரி எழுத கூட யாருக்கும் தைரியம் பிறக்கவில்லை.சமீப காலத்தில் புரட்சி எண்ணங்கள் எழுந்த சமயத்தில் கூட தாங்களே புலவர்கள் என்று பெருமைப்படுத்திக்கொண்ட பலர் தினம் தோறும் ம்ஞ்சுக்கள் புகளையே பாடினார்கள்.நாங்கள் டோக்கியோ நகரத்தில் ஜனபத்திரிகை என்ற பெயருடன் ஒரு தினசரி நடத்தி வந்தோம்.அதன் மூலமாக தேசிய பிரசாரம் செய்து கொண்டு இருந்தபோது மஞ்சுக்கள் சீனாவை ஆண்டுவந்ததால் நாம் அடிமை பிரசைகள் ஆகவில்லை என்று சிலர் கூறிக்கொண்டு வந்தார்கள்.இங்கனம் கூறிக்கொண்டு இருப்போர் மஞ்சு அரச பரம்பரையின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக ஒரு சங்கத்தை ஸ்தாபித்துக் கொண்டு இருக்கிறார்கள்.அதுமட்டுமல்ல , சீனாவின் தேசிய உணர்ச்சியை நசுக்கவும் இவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.இவர்கள் சீனாவில் வசிப்பவர்கள் அல்லர்.சீனாவுக்கு புறம்பான நாடுகளில் வசிக்கும் சீனர்கள்.ஆனால் சீனாவில் புரட்சி ஏற்பட்ட பிறகு இவர்கள் புரட்சியை ஆதரித்தார்கள்.
சீனாவில் தேசிய உணர்ச்சி இறந்து போனதற்கான சில காரணங்களை கூற விரும்புகிறேன்.இதற்கு காரணங்கள் பல.இவற்றில் முக்கியமானது நாம் அந்நிய இனத்தினுடைய ஆதிக்கத்திற்கு உட்பட்டிருப்பது தான்.ஒரு இனம் மற்றொரு இனத்தை ஆதிக்கம்கொண்டுவிட்டதேஆனால் ஆதிக்கம் கொள்ளப்பட்ட இனம் சுதந்திர எண்ணம் கொண்டு வாழும்படி அனுமதிக்கப்படுவதில்லை.


அந்நியருடைய ஆதிக்கத்தினால் சீனாவின் தேசியம் நசுக்கப்பட்டுவிட்டது.ஆனால் சீனர்களைவிட அடிமைப்பட்டுப்போன இனத்தினர் இன்னும் பலர் இருக்கிறார்கள்.உதாரணமாக யூதர்கள் .இயேசுவின் திருநாளைக்கு முன்பே தங்கள் நாட்டை இழந்து பிறரால் வெற்றி கொள்ளப்பட்ட இனம் ஆகிவிட்டார்கள்.இயேசுநாதர் பிரசங்கம் செய்து கொண்டிருந்தகாலத்தில் அவருடைய சீடர்கள் அவரை புரட்சிகாரர் என்றே கருதினார்கள்.அவர் யூதர்களின் அரசன் என்றே கருதப்பட்டார்.அவருடைய இரண்டு சீடர்களின் பெற்றோர்கள் அவரை பார்த்து ஆண்டவரே ; என்க்களுடைய நோக்கத்தை நிறைவேற்றி வைப்பீர்கள் ஆயின் எமது மூத்தமகன் தங்களது இடப்பக்கத்திலும் இளைய மகன் வலப்பக்கத்திலும் அமரட்டும் என்று கூறினார்கள்.அதாவது இயேசுவின் சீடர்கள் அவரை ஒரு புரட்சிக்காரர் என்றே கருதினார்கள் என்று தெரிகிறது.அரசியல் புரட்சி சம்மந்தமான சில எண்ணங்கள் இயேசுவின் மதத்தில் இருந்திருக்கலாம்.ஆனால் அவருடைய சிஸ்யர்களில் ஒருவர் அரசியல் புரட்சி தவறிவிட்டதென்று கருதி தனது குருநாதரை காட்டிக்கொடுத்துவிட்டார்.இவர் இயேசு ஒரு மத புரட்சிக்காரர் என்பதையும் அவர் தமது நாடு ஒரு தெய்வநாடு என்று சொல்லி வந்தார் என்பதையும் மறந்துவிட்டார்.எனவே யூதர்களின் ராச்சியம் அழிந்துபோனபோதிலும் அவர்களுடைய இனம் இயேசுவின் காலம் வரையிலும் இருந்து வந்தது.
இங்கிலாந்திலும் ருஸ்ஸியாவிலும் சேர்ந்து சில அறிஞர்கள் தேசியமானது குறுகிய மனப்பான்மை கொண்டது எனவும்.நவீன நாகரிக உலகத்திற்கு இது பொருந்தாது எனவும் கூறுகிறார்கள்.இவர்களோடு சில சீன இளையோரும் சேர்ந்து கூச்சல் போடுகிறார்கள்.இந்த உலக சகோதரதுவம் நல்லதா?பேச்சளவில் இது நல்ல தத்துவம் தான்.ஒரு நாட்டை ஆதிக்கம் கொள்ளவிரும்புவோர் இந்த உலக சகோதர தத்துவத்தை சொல்லி தான் வருகிறார்கள்.ஆனால் ஓர் எண்ணம் அல்லது தத்துவம் நல்லதா கெட்டதா என்பதை தீர்மானிக்க முன்னர் அனுட்டனத்தில் அது எப்படி இருக்கிறது என பார்க்க வேண்டும்.அந்த எண்ணம் அல்லது தத்துவம் நமக்கும் உலகத்துக்கும் நன்மை அளித்துக்கொண்டிருக்கிறது என்று தெரிந்தால் அது நல்லது தான்.அது அனுபவ சாத்தியத்திற்கு கூட கொண்டுவரபட கூடாமல் போனால் நல்லதல்ல.

மற்றவர்களை வெற்றி கொள்ள ஏகாதிபத்திய முறையை கையாளும் தேசத்தினர் தான்.சலுகையோடு கூடிய தங்கள் பதவியையும் செல்வாக்கையும் ஸ்திரப்படுத்திகொள்ளும் பொருட்டுஇந்த உலக சகோதரத்துவம் பற்றி பேசுகிறார்கள்.எப்படி ஒரு நூலாசிரியன் தனது ஜீவநோபாயத்திற்கு தனது எழுதுகோலை ஒரு கருவியாக உபயோகித்து கொள்கிறானோ அதைப்போலவே மானிட சமூகமானது தான் உயிர் வாழும் பொருட்டு தேசியத்தை ஒரு கருவியாக உபயோகிக்கிறது.தேசியம் அழிந்து போய் அதன் இடத்தில் உலக சகோதரதுவம் ஏற்பட்டுவுடுமானால் நாம் உயிர்வாழ முடியாது.இயற்கை சக்திகளின் துணை கொண்டு மற்ற இனத்தினர் நம்மை அடக்கிவிடுவர்.இயற்கை விதிகளின் படி பலசாலிகள்தான் வழ்கிறார்கள்.பலவீனர்கள் அழிந்துபோகிறார்கள்.நம்முடைய இனம் அழிந்து போக வேண்டும் என்று நம்மில் யாருமே விரும்பமாட்டார்கள்.வருங்காலத்தில் நமது தேசிய உணர்ச்சியை புதுப்பிக்க ஏதேனும் மார்க்கத்தை கண்டுபிடித்தால்.நம்மை வேறுவிதமான அரசியல்,பொருளாதார சக்திகள் அழுத்தினால் கூட நாம் வாழ்ந்துகொண்டிருக்க முடியும்.
எல்ல வல்லரசுகளும் லெனினை ஏன் எதிர்த்தன தெரியுமா? அவர் உலகம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுள்ளது எனவும் ஒரு பக்கம் 125கோடி மக்களும் இன்னொரு பக்கம் 25 கோடி மக்களும் இருக்கிறார்கள் என்றும்பின்னவர் முன்னவரை அடக்கியாண்டுஅதன் மூலமாக இயற்கைக்கு மாறுபட்டு செல்கிறார்கள் என்றும் இந்த அடக்குமுறையை அடக்குவதே இயற்கை நியதிப்படி நடப்பதாகும் என்றும் சொல்லு வந்தார்.
உலக அடக்குமுறையை எதிர்ப்பதாக இருந்தால் இந்த 125கோடி மக்களுடனும் சேர்ந்துகொள்ள வேண்டும்.முதலில் நாம் தேசியத்தை வலியுறுத்தி நமக்குள்ளே ஒற்றுமையை எற்படுத்தி கொள்ள வேண்டும்.சுயநல சக்திகளை உலகத்தினின்று விரட்டியடித்துவிட்ட பிறகு நாம் உலக சகோதரத்துவம் குறித்து பேசிக்கொள்ளலாம்.



ஸ்ன் யாட் ஸென்பிறப்பு:12-கார்த்திகை 1866.

மஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்து 17 ஆண்டுகள் போராடினார்.

1912 ஜனவரி மாதம் முதல் குடியரசு அமைந்தது.

இறப்பு12-பங்குனி1925.

ஸான்மின் கோட்பாடுகள்-தேசியம்,ஜனநாயகம்,மக்களின் வாழ்வாதாரம்.



Read more...

Wednesday, September 24, 2008

நடுக்கடலில் அபாயம் இருந்தும் தொடரும் படகு பயணம்....


முற்குறிப்பு :பிரசுரமாகும் இந்த ஆக்கமானது ஆங்கிலத்தில் டாக்டர் வி. சூரியநாராயணன் (ஓய்வு பெற்ற மூத்த விரிவிரயாளர்,சென்னை பல்கலைக்கழகம் )அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதன் தமிழ் ஆக்கம் ஆகும்.ஆக்கத்தின் பிரதான பகுதிகளையும் விவாத்ததிற்குரிய பகுதிகளையும் மொழிபெயர்த்து பிரசுரிக்கிறோம்.நண்பர்களின் கருத்துக்களை விம்பம் வரவேற்கிறது.

செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி இராமேஸ்வரத்தில் இருந்து தலமன்னார் நோக்கி 13 பேருடன் பயணித்த படகு ஆதாம் பாலத்துக்கு அருகில் கடலில் மூழ்கியதில் இலங்கை தமிழ் அகதிகள் 8 பேர் பலியானார்கள்.இதில்4 பெண்கள்,2 குழந்தைகள்,2ஆண்கள் அடங்குவர்.மானாமதுரை,புளியங்குடி,திருவண்ணாமலை முகாம்களில் வசித்துவந்த இவர்கள் தமது பயணத்திற்காக தலா 6000 ரூபா செலுதியுள்ளார்கள்.

இதேபோல ஒக்டோபர் 1996 இல் 14 பேர் பலியானார்கள்.மிகவும் மோசமான சம்பவம் பிப்ரவரி 1997 இல் நிகழ்ந்தது.இதில்165 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்கள்.உலகின் பல பாகங்களிற்கும் இலங்கையில் இருந்து தன்னிச்சையாக வெளியேறும் இலங்கை தமிழ் குடியேற்றவாசிகளின் நிலை பெரும் மனித அவலம் நிறைந்தது.

புவியியல் கேந்திரமும்,இன உறவு முறையும் தமிழ்நாட்டிற்கு பெருமளவு அகதிகள் படகில் வருவதை இலகுபடுத்தியதோடு புதுடில்லியும் ,சென்னையும் அவர்களின் அகதி நிலையை அங்கிகரித்ததோடுபுரிந்துணர்வு மற்றும் மனிதாபிமானத்தோடு அவர்களை ஏற்றுகொண்டார்கள்.அரசு அவர்களுக்கு இலவச வீட்டு வசதி செய்து கொடுத்துள்ளதோடு இலவச கல்வி இலவச மருத்துவம் நிதி உதவி போன்றவற்றையும் வழங்குகிறது.அத்தியாவசிய தேவைகளான அரிசி மண்ணெண்ணெய் போன்றவற்றை மானிய விலையில் வழங்குகிறது.இதனை விட தமிழ்நாடு அரசு அவர்கள் வேலை செய்வதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளது.தாம் பாதுகாப்பாக இருப்பதாக இவர்கள் உணர்கிறார்கள்.செலவினை ஏற்கக்கூடிய பெற்றோர் தமது பிள்ளைகளை ஆங்கில மொழி மூல பாடசாலைகளுக்கு அனுப்புகிறார்கள் .

4 அலைகளாக தமிழ் நாட்டிற்கு தமிழ் அகதிகள் வருகை தந்தார்கள்.

1.)24-07.1983 முதல் 27-07.1987 வரை மொத்த அகதிகள் 1 34053
2.)இரண்டாம் ஈழப்போர் ஆரம்பம் 06/1990. 25/08/1989 இற்கு பின்னர் 1 22000 தமிழர் தமிழ் நாடு வந்தார்கள்.ஐ நா தகவல்களின் படி 20-01/1992 முதல்20-03/1995 காலப்பகுதியில் 58 188 பேர் தனியார் கப்பல் மூலம் மற்றும் விமானம் மூலம் திரும்பவும் இலங்கை அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
3.)04/1995 மூன்றாம் ஈழக்கட்டப்போர் ஆரம்பம்.அது முதல் 2005 காலப்பகுதி வரை 22418 பேர் அகதிகளாக வருகை தந்தார்கள்.
4.)பிரகடனம் செய்யப்படாத 4 ஆம் ஈழப்போர்.ஜனவரி2006 முதல் செப்டம்பர் 2008 வரை 22 381 பேரகதிகளாக தமிழ் நாடு வந்துள்ளார்கள்

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து தனியார் கப்பல் மூலம் 25 585 பேர் இலங்கை திரும்பினர்.

தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் அகதிகள் மூன்று வகைப்படுவார்கள்
1.)117 முகாம்களில் வாழும் 72 889 பேர்.
2.)முகாமிற்கு வெளியில் வாழும் 23 489 பேர்.
3.)செங்கல்பட்டு சிறப்பு முகாம் 48 பேர்.

இலங்கை திரும்முவதற்கு வேறுமார்க்கம் இருந்த போதும் சட்டவிரோத படகு பயணத்தை இவர்கள் மேற்கொள்வதே இங்க்கு பிரதானமானது.ஏன் இவர்கள் இந்த வழியை நாடுகிறார்கள்.?

பதில் சுலபமானது.வெளியேறுவதற்கான அனுமதிப்பத்திரம் பெற ஆகக் குறந்தது 3 மாதம் ஆகிறது.பத்திரம் பெறுவதற்கு செலுத்தப்பட வேண்டிய பணத்தொகை.கொழும்பு சென்று வட பகுதிக்கு செல்வதில் உள்ள சிரமம் இப்படி பல காரணங்கள்.நடுக்கடலில் அபாயம் இருந்தும் சட்டவிரோத படகுப் பயணம் தொடர்கிறது.

விம்பம்

செய்தி குறிப்புக்கள்;சென்னையில் காரில் இரவில் சுற்றிய 6 இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டனர். ...
thatstamil.oneindia.in
ஈழத்தமிழர்கள் வாழும் அகதி முகாம்களின் நிலை… ... இந்நிலையில் தமிழகத்திலுள்ள அகதி ...
www.peoplesrights.in
அகதி முகாமிலிருந்த இலங்கையர் மாயம் கியூ பிரிவு ..

ராமேஸ்வரம் : அரசின் அனுமதி பெறாமல் மண்டபத்திலிருந்து அகதிகளை இலங்கைக்கு ...
article.wn.com/view/WNAT92ae7f456c4a9f7fa7097f636e3eb82e/ - 188k -
தென் மாவட்டங்களில் உள்ள இலங்கை அகதி முகாம்களை உளவுத் துறையினர் தீவிரமாக ...
thatstamil.oneindia.mobi/news
தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களின் அகதி ... மண்டயம் அகதி முகாமில் தங்கியுள்ள மகேஸ்வரி ...
www.keetru.com/visai/jul06/balamurugan
ஒப்பந்தத்தில் அகதி என்பதற்கான விளக்கம் ... அகதி முகாம்களைப் பார்வையிட்ட விவரம் ...
www.kalachuvadu.com/issue-80/kalaaivu.htm - 233k
முதல்வர் வருகை: மதுரையில் அகதிகளுக்கு தடை ... அகதிகள் முகாம்களை விட்டு வெளியே வர 6ம் ...
thatstamil.oneindia.in
thatstamil.oneindia.in/news/2008/08/05/tn-refugees-banned-from-going-out-of-

இலங்கை அகதிகளின் சொத்துக்களை ... அதிகாரிகள் மாநாட்டில் பேசிய முதல்வர்; "அகதிகள் என்ற ...
www.thinakkural.com

Read more...

Saturday, September 20, 2008

விட்டு செல்கிறேன்

இரவு என்பது
என்னை எப்போதும் நேசிக்கிறது.
இரவுப் பொழுதை இரசிக்கும்
நிலாவாய் நான்........

இரவின் சுகம்
என்றுமே அந்தரங்கமானது,
விடுப்பு கேட்பவர்கள்
மனிதர்களாகவே
எப்பொழுதும்
வாழ்கிறார்கள்......

இரவு வாய்மூடி
தூக்கம் செய்ததில்
சிலர் பகலை
நம்பினார்கள்.....

எனது இரவு நேரத்து
கனவுகளை கலைப்பதை தவிர
எனக்கு வழியில்லை

மரணம் நெருங்கும் வரை
தேடுகிறேன் மனிதர்களை........
விடியலும்,இரவும்
பழக்கமாகி போன இவர்களுக்கு நடுவில்
மனிதத்தை தேடுவது

சிறு வயதில்

தும்பி பிடித்ததற்கு சமானமானது.


எனது இரவு எனக்காக மீண்டும் வேண்டும்
செவ்வானம் எனக்கு தேவையில்லை
எனது இரவை கலைத்த


கீழ்வானம் ஆவது சிவக்கட்டும்
விட்டு செல்கிறேன்


எனது கனவுகளை



இன்னொரு மனிதன்
பயன்பெறட்டும்

Read more...

Thursday, September 18, 2008

அம்பாறை ஹர்த்தால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராகவே இது ரீம் வீ வி யின் திட்டமிட்ட சதி

Read more...

Sunday, August 31, 2008

தமிழ் மக்களை நாம் கைவிட மாட்டோம் இந்திய பிரதமர் உறுதி ;தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு.செல்வம் அடைக்கலநாதன் அவர்கள்....

Read more...

Monday, August 11, 2008

கைவிடப்பட்டார்...........

புழுதி படர்ந்த
எனது
ஊரின்தெருக்களை
நினைத்துப் பார்க்கிறேன்,

முன்னர் எல்லாம்
சத்தம் செய்து
எமது இரவைகலைத்த
பறவைகள்அங்கில்லை,

புழுதி படர்ந்த
எனது தெரு
இன்றும்
புழுதியைநேசித்தபடி.............

அன்று ஒரு நாள்
மின்சார கம்பிக்குள்
வாழ்வை தொலைத்த காகத்துக்காய்
அழுத நினைவு
இப்போதும்பாரமாய் கனக்கிறது.

துலா மிதிப்பின் பாரத்தில்
விட்டு சென்ற உறவுகள்
இதுவரை அறியவில்லை
காகம் துரத்திய குயில்களை,

பழுத்தல் பூவரசு
சொல்லாது என்ற நம்பிக்கையில்
வாழ்வு தொடர்கிறது...............

குயில் இப்போது கூவுவது இல்லை.
காகம் இப்போது கரைவதும் இலலை.
துலாக் கயிறு இப்போது பாரமும் இல்லை.

நம்பினோர் கைவிடப்பட்டார்.

Read more...

ஒரு நேர இரவில்.............

அதே இரவு
இன்றும் விடிகிறது.,....
ஒரு நேர இரவில்
தனது விடியலுக்காக

என்றோ சிறு வயதில்
நான் இரசித்த
அந்த நிலாவை
அதுஏன்முழுங்கியது.,

ஏப்பம் விட்டபோது
கதிரவனும் சந்திரனும்
கை கோர்த்ததை
பார்க்க முடிகிறது.

தொலவில் தெரிந்த

நட்சத்திரங்கள்
காணாமல் போயின ...


களவாடிய திருடர்கள்
ஒதுங்க இடம் இன்றி
ஒழித்துக் கொண்டார்கள்
ஒதுங்க இடம் தேடி..........

பவள மல்லிகை வாசத்தில்
அன்றைய இரவில்
பகலையும் இரவையும்

பிரித்துக் கொண்ட
நாம்
மதியத்தையும்
மாலையையும்
பிரிக்கத்தவறினோம்.

இரவு மீண்டும் விடிகிறது....
தான் தொலைத்த
அந்தஇரவைத்தேடி.....


அதே இரவு
மீண்டும்விடிகிறது
தனதுஇரவுக்காய்...................

Read more...

  © Blogger templates vimbam by vimbam.blogspot.com 2008

Back to TOP