ஒரு நேர இரவில்.............
அதே இரவு
இன்றும் விடிகிறது.,....
ஒரு நேர இரவில்
தனது விடியலுக்காக
என்றோ சிறு வயதில்
நான் இரசித்த
அந்த நிலாவை
அதுஏன்முழுங்கியது.,
ஏப்பம் விட்டபோது
கதிரவனும் சந்திரனும்
கை கோர்த்ததை
பார்க்க முடிகிறது.
தொலவில் தெரிந்த
நட்சத்திரங்கள்
காணாமல் போயின ...
களவாடிய திருடர்கள்
ஒதுங்க இடம் இன்றி
ஒழித்துக் கொண்டார்கள்
ஒதுங்க இடம் தேடி..........
பவள மல்லிகை வாசத்தில்
அன்றைய இரவில்
பகலையும் இரவையும்
பிரித்துக் கொண்ட
நாம்
மதியத்தையும்
மாலையையும்
பிரிக்கத்தவறினோம்.
இரவு மீண்டும் விடிகிறது....
தான் தொலைத்த
அந்தஇரவைத்தேடி.....
அதே இரவு
மீண்டும்விடிகிறது
தனதுஇரவுக்காய்...................
0 comments:
Post a Comment