Monday, August 11, 2008

கைவிடப்பட்டார்...........

புழுதி படர்ந்த
எனது
ஊரின்தெருக்களை
நினைத்துப் பார்க்கிறேன்,

முன்னர் எல்லாம்
சத்தம் செய்து
எமது இரவைகலைத்த
பறவைகள்அங்கில்லை,

புழுதி படர்ந்த
எனது தெரு
இன்றும்
புழுதியைநேசித்தபடி.............

அன்று ஒரு நாள்
மின்சார கம்பிக்குள்
வாழ்வை தொலைத்த காகத்துக்காய்
அழுத நினைவு
இப்போதும்பாரமாய் கனக்கிறது.

துலா மிதிப்பின் பாரத்தில்
விட்டு சென்ற உறவுகள்
இதுவரை அறியவில்லை
காகம் துரத்திய குயில்களை,

பழுத்தல் பூவரசு
சொல்லாது என்ற நம்பிக்கையில்
வாழ்வு தொடர்கிறது...............

குயில் இப்போது கூவுவது இல்லை.
காகம் இப்போது கரைவதும் இலலை.
துலாக் கயிறு இப்போது பாரமும் இல்லை.

நம்பினோர் கைவிடப்பட்டார்.

0 comments:

  © Blogger templates vimbam by vimbam.blogspot.com 2008

Back to TOP