பிள்ளையார் பிடிக்கப் போய்
பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கு வந்ததாக சொல்வார்கள் அதைப்போலத்தான் இந்தப் பதிவும்.பதிவு போட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது மனதில் பட்டதை கண்டதை கேட்டதை இப்படி எல்லாவற்றையும் பதிய வேண்டும் என்ற நினைவு எனது வேலையிடத்தில் உதித்தது.பூங்காவும் தேம்ஸ் நதிக்கரையும் தான் எனக்கு எழுதுவதற்கான கற்பனையை திறந்துவிடும் என்று சொல்வதற்கு நான் கவிஞனும் அல்ல எழுத்தாளனும் அல்ல.ஆனால் எப்படியும் ஒரு பதிவு போடு அப்புச்சி என்று மனம் அடித்துக்கொண்டது.எதை எழுதலாம் எப்படி எழுதலாம் இப்படி பல கேள்விகள்.ஒரு மையவாத சித்தாந்தக்குள் சுழல்போருக்கு சிலதை சொன்னால் அல்லது எழுதினால் பிடிக்காது.உடனடியாக உண்மைக்கு முன்னால் நடுநிலைமை என்ற ஒன்று இல்லை என்று தூக்கி பிடிப்பார்கள்.அவர்களின் வாதம் கூட எனக்கு தேவையில்லை.இப்படியான நினைவோடு எனது இரயில் பயணத்தை ஆரம்பித்தேன்.இது ஒன்றும் இரயில் பயணங்களில் சினிமா அல்ல.வேலை முடிந்து வீடு செல்லும் இரயில் பயணம்.எனக்கு முன்னால் ஒரு வாலிபன் அமர்ந்திருந்தான்.காதில் தோடு. மூக்கில் மூக்குத்தி,தலையில் ஓர் துண்டு, இறுக கட்டியிருந்தான்.வேண்டுமெண்றே தனது நீள காற்சட்டையை இடுப்புக்கு கீழே இறக்கி விட்டிருந்தான் என்பதை விட இரக்கி விட்டுக்கொண்டே இருந்தான்.அந்த வாலிபனுடன் பேசுவதற்கு எனக்கு ஆசையாக இருந்தது ஆனாலும் ஒரு பயம் ,பேசாவிட்டால் என்ன ஒரு முறை வடிவாக ஆளை பார்த்துவிடுவோம் என்ற முடிவில் வடிவேலு பாணியில் சொல்வதானால் ஈரல் குலை நடுங்க பார்த்தேன் ஆளை....அட இவனா அவன்?????
வன்னி மக்கள் எமது சொந்தங்கள் யுத்தத்தின் இறுதி விலையை கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.கிரிக்கட் ஸ்கோர் பார்ப்பது போல நமது புலம்பெயர்ந்த அல்லது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சமூக கல்வியில் பாடப்புத்தகத்தில் மட்டும் நாடுகளை பார்த்தோர்தமது புதிய நாடுகளில் ஸ்கோர் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.அப்போது ஒரு ஆர்ப்பாட்டம்,எனது நண்பன் கூட விடுவதாய் இல்லை அவன் நியாயமாக ஒரு கேள்வி கேட்டான் டேய் தேவையில்லாத பேரணிக்கு எல்லாம் போகிறாய் ஜீ 20 எதிர்ப்பு எல்லாம் தேவையில்லை வாறியா வரமாட்டியா?சரிடா வாறன் என்றுஅவனுக்கு சொல்லியாயிற்று.அதே திகதி என்னை எழுப்பினான்.அவன் சொன்னான் மச்சான் நான் பஸ்சிலை போறன் நீ அந்த இடத்துக்கு நேராக வந்திரு எண்டான்.சரிடா ஒகே எண்டேன்.இரயிலில் ஏறியதும் அப்பத்தான் நம்ம தமிழ் தேசியவாதியை கண்டேன்.அவர் தான் முதல் சொன்ன ஆள்.அவருக்கு பக்கத்தில் ஒரு பெண்.ஏனடா இதுக்குள் ஏறினன் எண்டு யோசித்தேன்.அந்த பெண்ணிடம் கேட்டார்கள் நான் சூ...ஒகே யா எண்று.அப்பிராணிதனமாக நான் எனது இருக்கையில் அமர்ந்திரிந்தேன்.அவர்கள் ஒரு ரீசேட் போட்டிருந்தார்கள்.அதில் பிரபாகரன் படமும் பின்புறத்தில் தமிழீழ வரை படமும் அச்சிட பட்டிருந்த்தது.நீங்கள் யார் என்று ஒரு கேள்வி கேட்டேன் தாங்கள் தான் ரி யை ஒ என்னு பதில் வந்தது.நான் அப்படியே ஸாக் ஆயிட்டன்...............அடுத்த பதிவில் இரயிலிடுந்து இறங்கியது முதல் நடைபெற்ற நிகழ்வுகளோடு சந்திப்போம்
அன்புடன்
அப்புச்சி
0 comments:
Post a Comment