Saturday, September 20, 2008

விட்டு செல்கிறேன்

இரவு என்பது
என்னை எப்போதும் நேசிக்கிறது.
இரவுப் பொழுதை இரசிக்கும்
நிலாவாய் நான்........

இரவின் சுகம்
என்றுமே அந்தரங்கமானது,
விடுப்பு கேட்பவர்கள்
மனிதர்களாகவே
எப்பொழுதும்
வாழ்கிறார்கள்......

இரவு வாய்மூடி
தூக்கம் செய்ததில்
சிலர் பகலை
நம்பினார்கள்.....

எனது இரவு நேரத்து
கனவுகளை கலைப்பதை தவிர
எனக்கு வழியில்லை

மரணம் நெருங்கும் வரை
தேடுகிறேன் மனிதர்களை........
விடியலும்,இரவும்
பழக்கமாகி போன இவர்களுக்கு நடுவில்
மனிதத்தை தேடுவது

சிறு வயதில்

தும்பி பிடித்ததற்கு சமானமானது.


எனது இரவு எனக்காக மீண்டும் வேண்டும்
செவ்வானம் எனக்கு தேவையில்லை
எனது இரவை கலைத்த


கீழ்வானம் ஆவது சிவக்கட்டும்
விட்டு செல்கிறேன்


எனது கனவுகளை



இன்னொரு மனிதன்
பயன்பெறட்டும்

0 comments:

  © Blogger templates vimbam by vimbam.blogspot.com 2008

Back to TOP