Wednesday, September 24, 2008

நடுக்கடலில் அபாயம் இருந்தும் தொடரும் படகு பயணம்....


முற்குறிப்பு :பிரசுரமாகும் இந்த ஆக்கமானது ஆங்கிலத்தில் டாக்டர் வி. சூரியநாராயணன் (ஓய்வு பெற்ற மூத்த விரிவிரயாளர்,சென்னை பல்கலைக்கழகம் )அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதன் தமிழ் ஆக்கம் ஆகும்.ஆக்கத்தின் பிரதான பகுதிகளையும் விவாத்ததிற்குரிய பகுதிகளையும் மொழிபெயர்த்து பிரசுரிக்கிறோம்.நண்பர்களின் கருத்துக்களை விம்பம் வரவேற்கிறது.

செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி இராமேஸ்வரத்தில் இருந்து தலமன்னார் நோக்கி 13 பேருடன் பயணித்த படகு ஆதாம் பாலத்துக்கு அருகில் கடலில் மூழ்கியதில் இலங்கை தமிழ் அகதிகள் 8 பேர் பலியானார்கள்.இதில்4 பெண்கள்,2 குழந்தைகள்,2ஆண்கள் அடங்குவர்.மானாமதுரை,புளியங்குடி,திருவண்ணாமலை முகாம்களில் வசித்துவந்த இவர்கள் தமது பயணத்திற்காக தலா 6000 ரூபா செலுதியுள்ளார்கள்.

இதேபோல ஒக்டோபர் 1996 இல் 14 பேர் பலியானார்கள்.மிகவும் மோசமான சம்பவம் பிப்ரவரி 1997 இல் நிகழ்ந்தது.இதில்165 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்கள்.உலகின் பல பாகங்களிற்கும் இலங்கையில் இருந்து தன்னிச்சையாக வெளியேறும் இலங்கை தமிழ் குடியேற்றவாசிகளின் நிலை பெரும் மனித அவலம் நிறைந்தது.

புவியியல் கேந்திரமும்,இன உறவு முறையும் தமிழ்நாட்டிற்கு பெருமளவு அகதிகள் படகில் வருவதை இலகுபடுத்தியதோடு புதுடில்லியும் ,சென்னையும் அவர்களின் அகதி நிலையை அங்கிகரித்ததோடுபுரிந்துணர்வு மற்றும் மனிதாபிமானத்தோடு அவர்களை ஏற்றுகொண்டார்கள்.அரசு அவர்களுக்கு இலவச வீட்டு வசதி செய்து கொடுத்துள்ளதோடு இலவச கல்வி இலவச மருத்துவம் நிதி உதவி போன்றவற்றையும் வழங்குகிறது.அத்தியாவசிய தேவைகளான அரிசி மண்ணெண்ணெய் போன்றவற்றை மானிய விலையில் வழங்குகிறது.இதனை விட தமிழ்நாடு அரசு அவர்கள் வேலை செய்வதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளது.தாம் பாதுகாப்பாக இருப்பதாக இவர்கள் உணர்கிறார்கள்.செலவினை ஏற்கக்கூடிய பெற்றோர் தமது பிள்ளைகளை ஆங்கில மொழி மூல பாடசாலைகளுக்கு அனுப்புகிறார்கள் .

4 அலைகளாக தமிழ் நாட்டிற்கு தமிழ் அகதிகள் வருகை தந்தார்கள்.

1.)24-07.1983 முதல் 27-07.1987 வரை மொத்த அகதிகள் 1 34053
2.)இரண்டாம் ஈழப்போர் ஆரம்பம் 06/1990. 25/08/1989 இற்கு பின்னர் 1 22000 தமிழர் தமிழ் நாடு வந்தார்கள்.ஐ நா தகவல்களின் படி 20-01/1992 முதல்20-03/1995 காலப்பகுதியில் 58 188 பேர் தனியார் கப்பல் மூலம் மற்றும் விமானம் மூலம் திரும்பவும் இலங்கை அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
3.)04/1995 மூன்றாம் ஈழக்கட்டப்போர் ஆரம்பம்.அது முதல் 2005 காலப்பகுதி வரை 22418 பேர் அகதிகளாக வருகை தந்தார்கள்.
4.)பிரகடனம் செய்யப்படாத 4 ஆம் ஈழப்போர்.ஜனவரி2006 முதல் செப்டம்பர் 2008 வரை 22 381 பேரகதிகளாக தமிழ் நாடு வந்துள்ளார்கள்

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து தனியார் கப்பல் மூலம் 25 585 பேர் இலங்கை திரும்பினர்.

தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் அகதிகள் மூன்று வகைப்படுவார்கள்
1.)117 முகாம்களில் வாழும் 72 889 பேர்.
2.)முகாமிற்கு வெளியில் வாழும் 23 489 பேர்.
3.)செங்கல்பட்டு சிறப்பு முகாம் 48 பேர்.

இலங்கை திரும்முவதற்கு வேறுமார்க்கம் இருந்த போதும் சட்டவிரோத படகு பயணத்தை இவர்கள் மேற்கொள்வதே இங்க்கு பிரதானமானது.ஏன் இவர்கள் இந்த வழியை நாடுகிறார்கள்.?

பதில் சுலபமானது.வெளியேறுவதற்கான அனுமதிப்பத்திரம் பெற ஆகக் குறந்தது 3 மாதம் ஆகிறது.பத்திரம் பெறுவதற்கு செலுத்தப்பட வேண்டிய பணத்தொகை.கொழும்பு சென்று வட பகுதிக்கு செல்வதில் உள்ள சிரமம் இப்படி பல காரணங்கள்.நடுக்கடலில் அபாயம் இருந்தும் சட்டவிரோத படகுப் பயணம் தொடர்கிறது.

விம்பம்

செய்தி குறிப்புக்கள்;சென்னையில் காரில் இரவில் சுற்றிய 6 இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டனர். ...
thatstamil.oneindia.in
ஈழத்தமிழர்கள் வாழும் அகதி முகாம்களின் நிலை… ... இந்நிலையில் தமிழகத்திலுள்ள அகதி ...
www.peoplesrights.in
அகதி முகாமிலிருந்த இலங்கையர் மாயம் கியூ பிரிவு ..

ராமேஸ்வரம் : அரசின் அனுமதி பெறாமல் மண்டபத்திலிருந்து அகதிகளை இலங்கைக்கு ...
article.wn.com/view/WNAT92ae7f456c4a9f7fa7097f636e3eb82e/ - 188k -
தென் மாவட்டங்களில் உள்ள இலங்கை அகதி முகாம்களை உளவுத் துறையினர் தீவிரமாக ...
thatstamil.oneindia.mobi/news
தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களின் அகதி ... மண்டயம் அகதி முகாமில் தங்கியுள்ள மகேஸ்வரி ...
www.keetru.com/visai/jul06/balamurugan
ஒப்பந்தத்தில் அகதி என்பதற்கான விளக்கம் ... அகதி முகாம்களைப் பார்வையிட்ட விவரம் ...
www.kalachuvadu.com/issue-80/kalaaivu.htm - 233k
முதல்வர் வருகை: மதுரையில் அகதிகளுக்கு தடை ... அகதிகள் முகாம்களை விட்டு வெளியே வர 6ம் ...
thatstamil.oneindia.in
thatstamil.oneindia.in/news/2008/08/05/tn-refugees-banned-from-going-out-of-

இலங்கை அகதிகளின் சொத்துக்களை ... அதிகாரிகள் மாநாட்டில் பேசிய முதல்வர்; "அகதிகள் என்ற ...
www.thinakkural.com

0 comments:

  © Blogger templates vimbam by vimbam.blogspot.com 2008

Back to TOP